
நாமக்கல்லில் 108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளராக பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை மனிதவளத்துறை அதிகாரிகள் சுகன் பெப்சி, அருண் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக 16 டிரைவர்கள், 7 மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட மேலாளர்கள், வாகன பராமரிப்பு மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan