
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription
செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ மற்றும் எச்.சி.எல்., இன்று தங்கள் முடிவுகளை அறிவித்தது. அதில் விப்ரோவின் லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 9 சதவீதம் சரிந்துள்ளது. எச்.சி.எல்., லாபம் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் ஐடி நிறுவனமான டி.சி.எஸ்., நேற்று முன் தினம் (அக்., 10) செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டது. அதனுடைய செப்டம்பர் காலாண்டு லாபம் முந்தைய ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. வருவாய் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் உலக பொருளாதாரப் போக்கு, மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக அதன் பங்குகள் நேற்றுடன் சரிவுடனே முடிந்தன. இன்று 0.96 சதவீதம் அளவிற்கு உயர்ந்தன. நீண்ட கால முதலீட்டாளர்கள் டிசிஎஸ் பங்கினை சரிவின் போதெல்லாம் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என பல்வேறு பங்குச்சந்தை ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
விப்ரோ
![]() |
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட விப்ரோவின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அது குறித்து பார்ப்போம். நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,667 கோடியாக இருந்தது. தற்போது 14.6% வளர்ந்து ரூ.22,539 கோடியாக உள்ளது. கடந்த ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையிலும் இது 4.69 சதவீதம் கூடுதல் ஆகும். ஆனால் நிறுவனத்தின் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,930 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2,659 கோடியாக, அதாவது 9.27 சதவீதம் குறைந்துள்ளது.
விப்ரோவின் ஒப்பந்த மதிப்பு இந்த காலாண்டில் 23.8 சதவீதம் உயர்ந்துள்ளது. பெரிய ஒப்பந்தங்கள் அதாவது ரூ.200 கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான ஒப்பந்தங்கள் முதல் அரையாண்டில் 42 சதவீதம் வளர்ந்துள்ளது. ஐடி சேவைகளின் மூலமான லாப வரம்பு இந்த காலாண்டில் 15.1 சதவீதமாக உள்ளது.
எச்.சி.எல்.,
![]() |
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான எச்.சி.எல்., செப்டம்பர் காலாண்டில் ரூ.3,489 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 6% அதிகம். ஜூன் காலாண்டை விடவும் 6% அதிகம். நிறுவனத்தின் வருவாய் 19.5 சதவீதம் உயர்ந்து ரூ.24,686 கோடியாக உள்ளது. இந்த காலாண்டில் நிறுவனம் 10,339 ப்ரெஷர்களை புதிதாக வேலைக்கு எடுத்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,19,325 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனம் மாறும் பணியாளர்களின் எண்ணிக்கை 23.8% ஆக தொடர்கிறது.
செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ மற்றும் எச்.சி.எல்., இன்று தங்கள் முடிவுகளை
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan