
கோலா திரங்கானு: மலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கோலா திரங்கானு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.
நேற்று நண்பகல் நிலவரப்படி அங்கிருந்த 50 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இரண்டு நிவாரண நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்தது.
நேற்றுக் காலை 7.15 மணி அளவில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் முதல் நிவாரண நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் கூடுதலானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
சுங்காய் நெருஸ், சுங்காய் சலோக், சுங்காய் டெர்சாட், சுங்காய் டெலிமோங் ஆறுகளில் ஏற்கெனவே தண்ணீர் மட்டம் ஆபத்தான அளவைக் கடந்துவிட்டதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
12 Sep 2022
4 Sep 2022
28 Feb 2021
30 Aug 2020
16 Aug 2020
9 Aug 2020
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan